Published : 14 Jul 2025 12:40 AM
Last Updated : 14 Jul 2025 12:40 AM

14 ஆண்​டு​களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மின் விளக்கொளியில் ஜொலித்த கோயில்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: ​முரு​கப் பெரு​மானின் முதல்​படை வீடான சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் இன்று அதி​காலை கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

முரு​கப் பெரு​மானின் அறு​படை வீடு​களில் முதல் வீடான திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் 14 ஆண்​டு​களுக்கு பிறகு இன்று கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது. இதையொட்​டி, கடந்த சில மாதங்​களாக திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. உபய​தா​ரர் மூலம் ரூ.70 லட்​சத்​தில்ராஜகோபுரம் புதுப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.2.44 கோடி​யில் ராஜகோபுரத்​தில் 7 தங்க கலசம், அம்​பாள் சந்​நிதி மற்​றும் கணபதி கோயி​லில் தலா ஒரு கலசம் என 9 கலசங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

திருப்​பணி​கள் நிறைவடைந்​ததை தொடர்ந்​து, கோயி​லின் வள்ளி தேவசேனா மண்​டபத்​தில் யாக​சாலை பூஜைகள் கடந்த 10-ம் தேதி தொடங்​கி, நேற்று முன்​தினம் வரை 5 கால பூஜைகள் நடை​பெற்​றன. இந்​நிலை​யில், நேற்று நடந்த 6, 7-ம் கால யாக​சாலை பூஜை​யில் உயர் நீதி​மன்ற நீதிபதி சுவாமி​நாதன், ஜோதிடர் கே.பி.​வித்​யாதரன் ஆகியோர் கலந்​து​ கொண்​டனர். 80 ஓது​வார்​கள் பன்​னிரு திரு​முறை​கள், திருப்​பு​கழ், கந்​தர் அனுபூதி முற்​றோதல் செய்​தனர்.

கும்​பாபிஷேக விழா​வில் பங்​கேற்க மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் இருந்து மீனாட்​சி, சுந்​தரேசுவரர் பரி​வார மூர்த்​தி​களு​டன் நேற்று இரவு 10 மணி அளவில் புறப்​பட்​டனர். திருப்​பரங்​குன்​றம் வந்​தடைந்த அவர்​களுக்கு 16 கால் மண்​டபத்​தில் வரவேற்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது. இன்று அதி​காலை 3.45 மணிக்கு 8-ம் கால யாக​சாலை பூஜை நடை​பெறும். அதி​காலை 5 மணிக்கு கலசங்​கள் புறப்​பாடும், அதை தொடர்ந்து 5.30 மணிக்கு சுப்​பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், பரி​வார மூர்த்​தி​கள், விமானங்​களுக்கு கும்​பாபிஷேகம் நடை​பெறும். 6 மணிக்கு தேவசேனா உடனுறை சுப்​பிரமணிய சுவாமிக்கு கும்​பாபிஷேகம் நடை​பெறும்.

10 ட்ரோன்​கள் மூலம் புனித நீரை பக்​தர்​கள் மீது தெளிக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த விழா​வில் 3 லட்​சம் பக்​தர்​கள் பங்​கேற்​பார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பக்​தர்​கள் சிரமமின்றி கும்​பாபிஷேகத்தை காண, கோயிலை சுற்றி பல்​வேறு இடங்​களில் எல்​இடி திரைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

கும்பாபிஷேக விழாவை முன்​னிட்​டு, 3 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். முன்​னேற்​பாடு பணி​களை அமைச்​சர் மூர்த்​தி, ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநகர காவல் ஆணை​யர் லோக​நாதன், மாநக​ராட்​சி ஆணை​யர்​ சித்​ரா ஆகியோர்​ நேற்​று பார்​வை​யிட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x