Published : 08 Jul 2025 05:39 AM
Last Updated : 08 Jul 2025 05:39 AM

காரைக்​கால் அம்​மை​யார் மாங்​கனி திரு​விழா: மாப்​பிள்ளை அழைப்​புடன் இன்று தொடக்​கம்

காரைக்​கால்: காரைக்​காலில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் காரைக்​கால் அம்​மை​யார் மாங்​க​னித் திரு​விழா இன்று (ஜூலை 8) மாப்​பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்​கு​கிறது. 63 நாயன்​மார்​களில் சிறப்​பிடம் பெற்ற காரைக்​கால் அம்​மை​யாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்​ளது. இக்​கோயி​லில், அம்​மை​யார் வரலாற்றை நினை​வு​கூரும் வித​மாக ஆண்​டு​தோறும் மாங்​கனித் திரு​விழா விமரிசை​யாக நடை​பெறும்.

காரைக்​கால் கைலாச​நாத சுவாமி, நித்​யகல்​யாணப் பெரு​மாள் வகையறா தேவஸ்​தானம் சார்​பில் நடத்​தப்​படும் இவ்​விழா இன்று (ஜூலை 8) மாலை பரமதத்​தர் அழைப்பு (மாப்​பிள்ளை அழைப்​பு) வைபவத்​துடன் தொடங்​கு​கிறது. நாளை காலை பரமதத்​தர் - புனிதவ​தியார் திருக்​கல்​யாணம், மாலை பிச்​சாண்​ட​வர் வெள்​ளை​சாற்றி புறப்​பாடு, 10-ம் தேதி அதி​காலை பஞ்​சமூர்த்​தி​களுக்கு மகா அபிஷேகம், காலை பிச்​சாண்​ட​வர் பவழக்​கால் சப்​பரத்​தில் வீதி​யுலா (மாங்​க​னிகளை வாரி இறைத்து வழிபடு​தல்), மாலை அமுது படையல், 11-ம் தேதி அம்​மை​யாருக்கு இறைவன் காட்​சிக் கொடுக்​கும் நிகழ்வு ஆகியவை நடை​பெற உள்​ளன. ஆக.8-ம் தேதி விடை​யாற்றி உற்​சவம் நடை​பெறும்.

விழாவையொட்டி மாவட்ட நிர்​வாகம், காவல் துறை சார்​பில் பக்​தர்​களுக்கு தேவை​யான சுகா​தார வசதி, பாது​காப்பு உள்​ளிட்ட ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த விழா ஏற்​பாடு​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் புதுச்​சேரி குடிமைப் பொருள் வழங்​கல் மற்றும் நுகர்​வோர் விவ​காரங்​கள் துறை அமைச்​சர் பி.ஆர்​.என்.​திரு​முரு​கன் தலை​மை​யில் நேற்று கோயில் வளாகத்​தில் நடை​பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x