Published : 07 Jul 2025 12:21 AM
Last Updated : 07 Jul 2025 12:21 AM

திருச்செந்தூரில் இன்று மகா கும்பாபிஷேக விழா: தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, ராஜகோபுரம் மற்றும் வளாகம் முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது. படம்: மு.லெட்சுமி அருண்

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​ல் மகா கும்​பாபிஷேகம் இன்று (7-ம் தேதி) நடை​பெறுகிறது. இதையொட்​டி, தமிழகம் முழு​வதும் இருந்து பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர்.

அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் திருப்​பணி​கள் நிறைவு​பெற்​று, கும்​பாபிஷேக விழா ஜூன் 26-ம் தேதி கணபதி பூஜை​யுடன் தொடங்​கியது. கடந்த 1-ம் தேதி மாலை​யாக​சாலை பூஜைகள் தொடங்​கின. கரிய​மாணிக்க விநாயகர், பார்​வதி அம்​மன், மூல​வர், வள்​ளி, தெய்​வானைக்கு கோயில் உள்​புறம் தந்​திரி சுப்​பிரமணி​யரு தலை​மை​யிலும், சுவாமி சண்​முகர் மற்​றும் பரி​வாரமூர்த்​தி​களுக்கு ராஜகோபுரத்​தின் கீழ் உள்ள பிரம்​மாண்ட யாக​சாலை​யில் 71 ஹோம குண்​டங்​கள் அமைத்​து, 700 கும்​பங்​கள் வைக்​கப்​பட்​டு. 96 மூலிகைகள் இடப்​பட்டு பிச்சை சிவாச்​சா​ரி​யார் தலை​மை​யிலும் பூஜைகள் நடை​பெற்​றன.

திருக்​கல்​யாண மண்​டபத்​தில் நேற்று முன்​தினம் மாலை முதல் பெரு​மாளுக்கு தனி​யாக 5 ஹோம குண்​டங்​கள் வைத்​து, பட்​டாச்​சா​ரி​யார்​கள் தலை​மை​யில் யாக​சாலை பூஜை தொடங்​கியது. இன்று (ஜூலை 7) அதி​காலை 4 மணிக்கு 12-ம் கால யாக​சாலை பூஜைகள், மகா தீபா​ராதனை நடை​பெறுகின்​றன. பின்​னர், யாக​சாலை​யில் இருந்து கும்​பங்​கள் கோயில் கோபுர விமான கலசங்​களுக்கு எடுத்​துச் செல்​லப்​படும். காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்​குள் மகா கும்​பாபிஷேகம் நடை​பெறுகிறது.

ராஜகோபுர கலசங்​கள், மூல​வர், வள்​ளி, தெய்​வானை கலசங்​களுக்கு தந்​திரி மற்​றும் போத்​தி​களும், சுவாமி சண்​முகர் மற்​றும் பரி​வாரமூர்த்தி கலசங்​களுக்கு சிவாச்​சா​ரி​யார்​களும், பெரு​மாள் கலசங்​களுக்கு பட்​டாச்​சா​ரி​யார்​களும் புனித நீரால் அபிஷேகம் செய்​கின்​றனர். கும்​பாபிஷேகம் முடிந்​தவுடன் ட்ரோன்​கள் மூலம் பக்​தர்​கள் மீது புனிதநீர் தெளிக்க ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

கும்​பாபிஷேகத்​தை ​காண கடற்​கரை வரை மட்​டுமே பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​வர். எனவே, கும்​பாபிஷேகத்தை தங்​குதடை​யின்றி பக்​தர்​கள் காண்​ப​தற்கு வசதி​யாக நகரம் முழு​வதும் முக்​கிய பகு​தி​களில் 70 பெரிய எல்​இடிதிரைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கும்​பாபிஷேக விழாவை காண தமிழகம் மற்​றும் பிற மாநிலங்​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பேருந்​துகள் மற்​றும் கார், வேன்​களில் திருச்​செந்​தூருக்கு வந்​துள்​ளனர். திருச்​செந்​தூர் நகரமே விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. விழாவையொட்டி ஆயிரக்​கணக்​கான போலீ​ஸார் பாது​காப்பு பணி​களில் ஈடு​பட்​டுள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x