Published : 06 Jul 2025 12:57 AM
Last Updated : 06 Jul 2025 12:57 AM

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள மகா கும்பாபிஷேக விழாவுக்காக நேற்று மூலவருக்கான யாகசாலையில் பூஜைகளை நடத்திய கேரள தந்திரிகள்.

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் கோயி​லில் 16 ஆண்​டு​களுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்​பாபிஷேகம் நடக்​கிறது.

அறு​படை வீடு​களில் 2-வது படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் மூலவர் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை அம்மனுக்கு, அறநிலை​யத் துறை சார்​பில் ரூ.100 கோடி​யில் திருப்​பணி​கள் நிறைவு பெற்​றுள்​ளன. இதையடுத்​து, கடந்த 1-ம் தேதி கும்​பாபிஷேக விழா யாக​சாலை பூஜை​யுடன் தொடங்​கியது. தந்​திரி சுப்​பிரமணி​யரு தலை​மை​யில் கேரள முறைப்​படி யாகங்​கள் நடை​பெறுகின்​றன.

அதே​போல, மூலவர் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ராஜகோபுரத்​தின் கீழ் பிரம்​மாண்ட யாக​சாலை​யில் 71 ஹோம குண்​டங்​கள் அமைத்​து, 700 கும்​பங்​களு​டன் பூஜைகளும், 5 ஹோம குண்​டங்​களில் வேள்வி​களும் நடை​பெற்று வரு​கின்​றன. இன்று காலை 10-ம் கால யாக​சாலை பூஜை நடக்​கிறது. நாளை காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்​குள் ராஜகோபுர கலசங்​கள், மூல​வர், வள்​ளி, தெய்​வானை விமான கலசங்​களுக்கு தந்​திரி மற்​றும் போத்​தி​களும், சுவாமி சண்​முகர் மற்​றும் பரி​வாரமூர்த்தி கலசங்​களுக்கு சிவாச்​சா​ரி​யார்​களும், பெரு​மாள் கலசங்​களுக்கு பட்​டாச்​சா​ரி​யார்​களும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்​கின்​றனர்.

கும்​பாபிஷேக விழாவை கண்​காணித்து சிறப்​பாக நடத்த 3 ஐஏஎஸ் அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். திருச்​செந்​தூர் நகரில் 6 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப்பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். 30 காவல் உதவி மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. விமான தளத்​தில் மடா​திப​தி​கள், நீதிப​தி​கள், அமைச்​சர்​கள், அதி​காரி​கள் மற்றும் விஐபிக்​கள் என 800 பேர் மட்​டுமே அனு​ம​திக்​கப்பட உள்​ளனர்.

விழாவையொட்டி 400 சிறப்பு பேருந்​துகளும், நகரில் தற்​காலிக வாகன நிறுத்​தமிடங்​களில் இருந்து ரதவீ​தி​கள் வரை 30-க்​கும் மேற்​பட்ட நகர பேருந்​துகளும் இயக்​கப்பட உள்​ளன. நெல்​லை​யில் இருந்து திருச்​செந்​தூருக்கு சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. பக்​தர்​கள் கும்​பாபிஷேகத்தை பார்ப்​ப​தற்கு 70 இடங்​களில் எல்​இடி திரைகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. கோயில் வளாகம், நகர் முழு​வதும் 1,000 சிசிடிவிக்​கள் வைக்​கப்​பட்டு கண்​காணிக்​கப்​படு​கிறது. மேலும், ட்ரோன் கேமரா மூல​மாகவும் கண்​காணிக்​கப்​படுகிறது.

மொத்​தம் 1,500 செவ்​வாழை மரங்​கள், 5 ஆயிரம் செங்​கரும்​பு​கள், 1,500 இஞ்சி குலைகள், பலாப்பழங்​கள், மா, முந்​திரி கொத்​து, பாக்​குமரங்​கள் ஆகிய​வற்​றின் மூலம் கோயில் வளாகம், உட்​பிர​காரம் ஆகியவை அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன. கோயி​லில் உள்ள 137 அடி உயர பிரம்​மாண்ட ராஜகோபுரத்​தில்​ நேற்​றிர​வு லைட்​ ஷோ காண்​பிக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x