Published : 21 May 2025 02:38 PM
Last Updated : 21 May 2025 02:38 PM

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா: ஜூன் 3-ல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தொடக்கம்

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஜுன் 3ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி ஜுன் 3ம் தேதி காலபூஜை முடிந்து மாலை ராவண சம்ஹாரமும், ஜுன் 4-ம் தேதி பகல் 12 மணியளவில் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேக வைபவ விழாவும், ஜுன் 5-ம் தேதி காலை 8 மணியளவில் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்வும் நடைபெறுகிறது.

ஜுன் 4-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜைக்கு பின்னர் ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் மற்றும் ராமர், விபீஷணர் பட்டாபிஷேக விழாவுக்கு கோதண்ட ராமர் கோயிலுக்குச் செல்வதால் அன்று காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் கோயில் நடை அடைக்கப்படுவதுடன், கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x