Published : 12 May 2025 05:06 AM
Last Updated : 12 May 2025 05:06 AM

இன்று வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் விழா

மதுரை: மதுரை சித்​திரைத் திரு​விழா​வின் முத்​திரை பதிக்​கும் விழா​வான வைகை ஆற்​றில் கள்​ளழகர் இறங்கி எழுந்​தருளும் வைபவம் இன்று காலை நடை​பெறுகிறது. இதை முன்​னிட்டு லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​தனர். இதனால், மதுரை மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.

மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா மே 8-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்​டாம் நாள் மாலை​யில் சுந்​தர​ராஜ பெரு​மாள் தோளுக்​கினி​யானில் எழுந்​தருளி​னார். மூன்​றாம் நாளான நேற்று முன்​தினம் காலை​யில் தோளுக்​கினி​யானில் சுந்​தர​ராஜபெரு​மாள்திருக்​கல்​யாண மண்​டபத்​தில் எழுந்​தருளி​னார்.

பின்​னர் கண்​டாங்கி பட்டு உடுத்​தி,நெற்​றிப்​பட்​டை, கரங்​களில்வளைத்​தடி, நேரிக்​கம்பு பரி​வாரங்​களடன் மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்க கள்​ளழகர் திருக்​கோலத்​தில் தங்​கப்பல்​லக்​கில் மதுரைக்​குப் புறப்​பட்​டார். கோயில் ராஜகோபுர வாசலிலுள்ள பதினெட்​டாம்​படி கருப்​பண​சாமி சந்​நி​தி​யில் தீபா​ராதனை நடந்​தது.

அன்றிரவு பொய்​கைக்​கரைப்​பட்​டி, கள்​ளந்​திரி பகு​தி​யிலுள்ள மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி அப்​பன்​திருப்​பதி ஜமீன்​தார் மண்​டபத்​தில் தங்​கி​னார். அதி​காலை ஒரு மணி​யள​வில் சுந்​தர​ராஜன்​பட்டி மறவர் மண்​டபத்​தில் எழுந்​தருளி​னார். பின்​னர் கடச்​சனேந்​தல் வழி​யாக மதுரை மாநகர எல்​லை​யான மூன்​று​மாவடிக்கு நேற்று அதி​காலை 4 மணி​யள​வில் வந்​தடைந்​தார் கள்​ளழகர்.

மதுரை மூன்று மாவடி​யில் கள்​ளழகரை வரவேற்க பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் விடிய விடிய காத்​திருந்​தனர். கள்​ளழகரைப் பார்த்​ததும் பக்தி பரவசமடைந்து கோவிந்​தா, கோவிந்தா என முழக்​கங்​களை எழுப்​பி​யும், தண்​ணீர் பீய்ச்சி அடித்​தும் கள்​ளழகரை வரவேற்​றனர்.

சித்​திரைத் திரு​விழாவை முன்​னிட்டு மதுரை மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. பக்​தர்​கள் கூட்​டம் கூட்​ட​மாக மதுரை மாநகரை நோக்கி வந்த வண்​ணம் உள்​ளனர்.

இரவு 8 மணி​யள​வில் தல்​லாகுளம் பிரசன்ன வெங்​க​டாசலபதி கோயி​லில் கள்ளழகர் எழுந்​தருளி​னார். அங்கு அவருக்கு இரவு 11.30 வரை திரு​மஞ்​சனம் நடை​பெற்​றது. பின்​னர் தங்​கக்​கு​திரை வாக​னத்​தில் எழுந்​தருளி, வில்​லிபுத்​தூர் ஆண்​டாள் நாச்​சி​யார் சூடிக்​கொடுத்த மாலையை அணிந்து கொண்​டார். கோயி​லில் இருந்து புறப்​பா​டாகி தல்​லாகுளம் கருப்​பண​சாமி கோயி​லில் ஆயிரம் பொன் சப்​பரத்​தில் கள்​ளழகர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தார்.

இன்று காலை 5.45 மணி​முதல் 6.05 மணிக்​குள் கள்​ளழகர் வைகை ஆற்​றில் இறங்​கு​கிறார். அப்​போது அங்கு திரண்​டிருக்​கும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​களுக்கு அருளாசி தந்​து​விட்டுகாலை 7.25 மணி​யள​வில் வையாளி​யாகி வீர​ராகவப் பெரு​மாளுக்கு மாலை சாற்​றி​விட்டு அங்​கிருந்து ராம​ராயர் மண்​டகப்​படிக்கு புறப்​படு​கிறார். அங்கு பக்​தர்​கள் தண்​ணீர் பீய்ச்சி அடித்து கள்​ளழகரை குளிர்விக்​கின்​றனர். இரவில் வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லில் தங்​கு​கிறார். நாளை மே 13-ல் தேனூர் மண்​டகப்​படி​யில் மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்​கிறார். அன்​றிரவு ராம​ராயர் மண்​டபத்​தில் விடிய விடிய தசாவ​தா​ரம் நடை​பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x