Published : 11 Apr 2025 05:49 PM
Last Updated : 11 Apr 2025 05:49 PM

பங்குனி உத்திரத் திருவிழா: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேகம்

ராமேசுவரம்: பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை விஸ்வநாதர் சன்னதி எதிரே 1008 சங்குகள் அடுக்கி கங்கை தீர்த்தம் ஊற்றப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சங்காபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலின் மேலவாசல் முருகன் சன்னதியில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 63-வது ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

மேலவாசல் முருகன் சன்னதியில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் பால்குடம், மயில், பறக்கும் காவடிகளில் பக்தர்கள் தொங்கியபடி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அது போல 2 அடி முதல் 20 அடி நீளம் வரையிலான நீண்ட வேல்களை வாயில் குத்தியபடியும் சாலைகளில் ஆடி வந்து மேலவாசல் முருகன் சன்னதியில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு 8 மணி அளவில் மேலவாசல் முருகன் சன்னதியில் பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், மகாதீபாராதனை பூஜை நடைபெற்ற உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x