Published : 18 Feb 2025 06:23 AM
Last Updated : 18 Feb 2025 06:23 AM
திருமலையில் மார்ச் 9 முதல் 13 வரை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
5 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த தெப்பத்திருவிழாவில் தினமும் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.
திருமலையில் தினமும் இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த தெப்பத்திருவிழாவில் முதல் நாளான மார்ச் 9-ம் தேதி, சீதா சமேத ஸ்ரீராமர், லட்சுமணர், அனுமன் ஆகியோர் 3 சுற்று உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்.
மார்ச் 10-ம் தேதி பாமா, ருக்மணி சமேராய் ஸ்ரீ கிருஷ்ணர் 3 சுற்று உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இதனை தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவர் மலையப்பர் 5 முதல் 7 சுற்றுகள் வரை உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
இதனையொட்டி, மார்ச் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை திருமலையில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT