Published : 13 Feb 2025 12:38 AM
Last Updated : 13 Feb 2025 12:38 AM

சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

திருச்சி: சமயபுரம் மாரி​யம்மன் கோயி​லில் கடந்த 3-ம் தேதி தைப்​பூசத் திரு​விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. நேற்று முன்​தினம் கண்ணாடி பல்லக்​கில் எழுந்​தருளிய அம்மன் கோயி​லில் இருந்து புறப்​பட்டு, வழிநெடுக வழிநடை உபயங்கள் கண்டருளினார். பின்னர், மண்ணச்​ச நல்​லூர் நொச்​சியம் வழியாக வடகா​விரி எனப்​படும் கொள்​ளிடம் ஆற்றை வந்தடைந்​தார். அங்கு அம்மன் தீர்த்​தவாரி கண்டருளினார்.

அப்போது, அம்மனின் அண்ணன் முறையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மாரி​யம்​மனுக்கு சீர்​வரிசை கொடுப்​ப​தற்காக கருட மண்டபத்​தில் எழுந்​தருளினார். அங்கிருந்து வாண வேடிக்கை​யுடன், மேள தாளங்கள் முழங்க கோயில் இணை ஆணையர் மாரியப்பன் உள்ளிட்​டோர் சீர்​வரிசைப்பொருட்களை எடுத்​துக் கொண்டு நேற்று முன்​தினம் இரவு வடகா​விரியை வந்தடைந்​தனர்.

அங்கு சீர்​வரிசை பொருட்களை சமயபுரம் கோயில் இணைஆணையர் பிரகாஷிடம் முறைப்படி வழங்​கினர். பின்னர், பட்டு வஸ்திரங்​கள், வளையல், பூக்கள், பழங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய சீர்​வரிசைப் பொருட்களை கொண்டு அம்மனுக்கு அலங்​காரம் செய்யப்​பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு வடகா​விரி​யில் இருந்து கண்ணாடி பல்லக்​கில் அம்மன் புறப்​பட்​டார். வழிநெடுக மண்டகப்படி மரியாதைகளை பெற்​றபடி இரவு 11 மணிக்கு கோயிலை அடைந்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x