Published : 03 May 2024 05:45 AM
Last Updated : 03 May 2024 05:45 AM

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த குருபகவான்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதல் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் தாயாரம்மன் குளம்அருகே உள்ள குரு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் கோவிந்தவாடி அகரம் அருகே உள்ள குருதட்சிணாமூர்த்தி கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலை உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விநாயகர் கோயிலில் தாரை சமேத தேவ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x