Published : 05 Sep 2022 05:58 AM
Last Updated : 05 Sep 2022 05:58 AM
தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அண்மையில் வெளியிட்டிருக்கும் 2021-க்கான ஆண்டறிக்கையின்படி, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் சுமார் 40% அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. என்சிஆர்பி ஆண்டறிக்கைகள், பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே தயாராகின்றன.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பொறுத்தவரையில், பாதிப்புக்கு ஆளானவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நாடுவதற்குத் தயக்கம் காட்டும் நிலை இன்னமும்கூடத் தொடரும்நிலையில், கடந்த ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை என்பது ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவும் வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT