Published : 10 Nov 2025 06:29 AM
Last Updated : 10 Nov 2025 06:29 AM
அரசியல் கட்சிகள் பேரணி, பொதுக் கூட்டம் போன்றவற்றைப் பாதுகாப்பாக நடத்துவதற்கான பரிந்துரைகளைத் தமிழக அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைவும் அவசியமாகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரைப் பயணத்துக்குப் பாரபட்சம் காட்டாமல் அனுமதி கிடைக்கச் செய்ய டிஜிபிக்கு உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி வழக்குத் தொடுத்தது. இதையடுத்து, அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்துகிற வகையிலான விதிமுறைகளை வகுக்கும்படி நீதிபதி என்.சதீஷ்குமார் தமிழகக் காவல் துறைக்கு செப்டம்பர் 18இல் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT