Published : 28 Oct 2025 06:56 AM
Last Updated : 28 Oct 2025 06:56 AM
இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு ரூ. 600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்திருப்பது கவலை அளிக்கிறது. மது விற்பனையில் மூன்றாவது பெரும் சந்தையாக இந்தியா உள்ளது.
அதிகப்படியாக மதுபானம் விற்பனை ஆகும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட் ஆகியவை உள்ளன. மது விற்பனையில் உச்சபட்ச லாபம் ஈட்டுபவையாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளன. பிஹார், குஜராத், மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும் கள்ளச் சந்தைகளில் அங்கு மது விற்பனை நடந்துகொண்டு இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT