Published : 07 Oct 2025 06:42 AM
Last Updated : 07 Oct 2025 06:42 AM
சென்னை எண்ணூர் அருகே புதிய அனல் மின் நிலையங்களுக்கான கட்டுமானப் பணியில் விபத்து ஏற்பட்டு, புலம்பெயர் தொழிலாளர்கள் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் விபத்துகள் அடிக்கடி நிகழ்வது, அவர்களின் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தச் சமூகத்திடமும் இத்தகைய வளர்ச்சிப் பணிகள் குறித்த அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடக்கூடும். அத்தகைய சூழல் ஏற்பட்டுவிடாமல் தடுப்பது அவசியம்.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே வாயலூர் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில் இரண்டு அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 1,320 மெகாவாட் மின்சார உற்பத்தி இதன் இலக்கு. புலம்பெயர் தொழிலாளர்களும் பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT