Published : 01 Aug 2025 07:17 AM
Last Updated : 01 Aug 2025 07:17 AM
தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, போர் நிறுத்தத்தில் அமெரிக்கா தலையிட்டதாக எழுந்திருக்கும் புகார்கள், பிஹார் தேர்தலை ஒட்டி வாக்காளர்கள் நீக்கம் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
விவாதங்களை எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் ஆரோக்கியமாகக் கொண்டுசெல்கின்றனரா என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. ஜூலை 21ஆம் தேதி தொடங்கியிருக்கும் இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், முதல் மூன்று நாட்களில் மக்களவையும் மாநிலங்களவையும் முடங்கின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT