Published : 13 Jun 2025 06:50 AM
Last Updated : 13 Jun 2025 06:50 AM
அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த அறிவுத் தேடல், கருப்பொருள் வாசிப்பு வாரம் ஆகியவை செயல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மத்தியில் பாடப்புத்தகம் சாராத புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும் பள்ளி நூலகங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதும் இதன் நோக்கங்கள் என்பதால், இந்த முன்னெடுப்பு சிறப்புக் கவனம் பெறுவதில் வியப்பில்லை.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அவற்றில் ஒரு திட்டமான ‘வாசிப்பு இயக்கம்’ சார்பாக, கடந்த ஆண்டு 127 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT