Published : 09 Jun 2025 06:57 AM
Last Updated : 09 Jun 2025 06:57 AM

ப்ரீமியம்
ராகிங் கொடுமைகள்: ஆக்கபூர்வமான நடவடிக்கை தேவை

ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டிருப்பது, வரவேற்கத்தக்கது. கல்லூரிகளில் புதிய வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், யுஜிசியின் இந்த உத்தரவு நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கையாகும்.

அண்மைக் காலமாகக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங் தொடர்பான புகார்கள் அதிகரித்துவருகின்றன. 2022 - 2024 காலக்கட்டத்தில், நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் 51 ராகிங் மரணங்கள் பதிவாகியுள்ளதாக ‘கல்வியில் வன்முறைக்கு எதிரான சங்கம்’ (சேவ்) நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x