Published : 27 May 2025 06:35 AM
Last Updated : 27 May 2025 06:35 AM
தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை. காலி இடங்களுக்கான வார்டு மறுவரையறை, இடஒதுக்கீட்டை இறுதிசெய்தல் போன்ற பணிகளை முடிக்காமல் தேர்தல் நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகளுக்கு ஏதேனும் ஒரு வடிவத்தில் அவ்வப்போது முட்டுக்கட்டைகள் எழுவது வருத்தத்துக்குரியது; அதேவேளையில், இத்தகைய தேக்கங்கள் நிகழாத வகையில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்த உத்தரவு உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT