Published : 15 May 2025 06:36 AM
Last Updated : 15 May 2025 06:36 AM
தமிழக ரயில்வே பணிகளுக்குத் தொடர்ந்து குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு வலியுறுத்திவந்த நிலையில், 2025-26 நிதியாண்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இது கடந்த நிதியாண்டைவிட (ரூ.6,320 கோடி) அதிகம். திண்டிவனம் - நகரி, தருமபுரி - மொரப்பூர், மதுரை - தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழி), சென்னை - கடலூர் உள்ளிட்ட எட்டு புதிய வழித்தடங்களுக்காக ரூ.621.8 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சில திட்டங்கள் 2007இல் அறிவிக்கப்பட்டவை. புதிய வழித்தடங்களுக்கான நீண்ட காலக் காத்திருப்பு நிறைவுபெறும் என்கிற நம்பிக்கையை இந்த நிதி ஒதுக்கீடு அளித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT