Published : 18 Apr 2025 09:24 AM
Last Updated : 18 Apr 2025 09:24 AM
பல்வேறு நாடுகளால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அந்நாட்டுடன் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அணு ஆயுதங்கள் உற்பத்தியில் ஈரான் ஈடுபடுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெடுங்காலமாகவே குற்றம்சாட்டி வந்தன.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையின்படி, மின்சாரம், மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக மட்டுமே அணு ஆற்றலைப் பயன்படுத்திவருவதாக ஈரான் கூறியது. ஈரானுக்குச் சில பொருளாதாரத் தடைகளை 1980இல் முதன்முதலாக அமெரிக்கா விதித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT