Published : 25 Mar 2025 06:47 AM
Last Updated : 25 Mar 2025 06:47 AM

ப்ரீமியம்
இணையவழிக் குற்றங்கள்: இறுக்கமான கடிவாளத்துக்கான தருணம்!

இணையவழிக் குற்றங்கள் 2022-24இல், மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஏமாற்றப்பட்டோர் இழந்த தொகை 21 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் அச்சுறுத்தலாக நீடித்துவரும் இந்தச் சிக்கல் வெவ்வேறு பரிமாணங்களில் அதிகரித்துவருவது மிகுந்த கவலைக்குரியது. மார்ச் 12 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய

மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த இணையவழிக் குற்றங்கள் குறித்து ‘நேஷனல் சைபர்கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல்’ (என்சிசிஆர்பி) பதிவுசெய்துள்ள தகவல்களை வெளியிட்டார். அதன்படி, இந்திய அளவில் 2022இல் 39,925 குற்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; மொத்தம் ரூ.91.14 கோடி அபகரிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x