Published : 03 Nov 2023 06:20 AM
Last Updated : 03 Nov 2023 06:20 AM

ப்ரீமியம்
மழைக் கால நோய்கள்: வரும் முன் காக்கத் தயாராவோம்

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்குவதற்கு முன்பே மழைக் கால நோய்கள் பரவத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 4,148 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கொசுக்கள் மூலம் பரவும் நோய்த் தடுப்புக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுவரை, நான்கு வயதுச் சிறுவன் உள்பட மூவர் டெங்கு பாதிப்பில் இறந்துள்ளனர்.

இந்நிலையில், நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகள்தோறும் மாநிலம் முழுவதும் குறைந்தது 1,000 இடங்களில் நோய்த்தடுப்பு முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்குக் காய்ச்சல், சிக்குன் குன்யா, மலேரியா போன்றவற்றோடு தண்ணீர் மூலம் பரவும் காலரா, டைபாய்டு போன்றவற்றைக் கண்டறிய இந்த முகாம்கள் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x