Published : 11 Jul 2023 06:25 AM
Last Updated : 11 Jul 2023 06:25 AM
பொதுச் சமூகத்தால் பலவிதங்களில் புறக்கணிப்புக்கு உள்ளாகிவருகிறது திருநர் சமூகம். முறையான கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்காத காரணத்தால், அவர்களது சமூக வாழ்க்கையும் கேள்விக்கு உரியதாக இருக்கிறது. இந்தச் சூழலில், ‘பிரைடு புராஜெக்ட்’ (Pride Project) என்கிற பெயரில் திருநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டதைக் கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளச் சமூக நீதித் துறையின் உதவியுடன் செயல்படுத்தப்படவிருக்கும் இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை.
திருநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களையும் பொருட்டு பல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அதில் கேரளம் முன்னோடியாக உள்ளது. 2014இல் தேசியச் சட்ட சேவைகள் ஆணையத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான வழக்கில், திருநர் உரிமைகள் குறித்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT