Published : 07 Jul 2023 06:23 AM
Last Updated : 07 Jul 2023 06:23 AM
மகாராஷ்டிரத்தில் சிவசேனையைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவைச் சந்தித்திருக்கிறது. சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டே, அவருக்கு ஆதரவான எம்எல்ஏ-க்களுடன் 2022ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் இணைந்ததுபோல, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பாஜக கூட்டணிக்குள் இணைந்து, துணை முதல்வராகியிருக்கிறார். அவரை ஆதரிப்பதாகக் கூறப்படும் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களில் 8 பேர் அமைச்சர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
2019இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியானது முதலே மகாராஷ்டிரத்தில் அரசியல் கட்சிகள் அரசியல் தார்மிகத்தைக் கடைப்பிடிக்காமல் ஜனநாயகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தத் தொடங்கின. பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற பின்னர் முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக அக்கூட்டணியிலிருந்து வெளியேறியது சிவசேனை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT