Published : 30 Apr 2023 07:48 AM
Last Updated : 30 Apr 2023 07:48 AM
தமிழில் தொழிலாளர் பாடுகளை மையமாக வைத்து, அதற்கான தீர்வை முன்வைத்து எழுதப்பட்ட நாவல் எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’. தொ.மு.சி. எழுதிய முந்தைய இரு நாவல்களிலிருந்து முற்றிலும் தனித்துவமானது இந்நாவல். மற்றவை தனி மனிதர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டவை. சுதந்திரத்துக்கு முன்பும், சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டிலும் இந்தப் படைப்புகள் எழுதப்பட்டன என்பது கவனம் கொள்ளத்தக்கது. 1951இல் எழுதப்பட்டதுதான் ‘பஞ்சும் பசியும்’. தொ.மு.சி. படைப்புகளில் அதிகம் கவனம் பெற்றதும் இந்நாவல்தான்.
சுதந்திரம் அடைந்த பிறகுதான் இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் கூடுதல் சக்திபெற்றன. அதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் இந்திய சுதந்திரப் போராட்ட நீரோட்டத்தில் கலந்துவிட்டன. நாட்டு விடுதலை என்பதன் ஓர் அம்சமாகவே அவை பார்க்கப்பட்டன. சுதந்திர இந்தியாவில் இதெல்லாம் மாறி, நாடும் தொழிலாளியும் சுபிட்சம் அடைவார்கள் என்கிற மூடநம்பிக்கையும் இதன் காரணமாக இருக்கலாம். முதலாளி இடத்தில் அரசு வந்துவிட்டதுதான் வேறுபாடு. தொழிலாளர் வர்க்க நலனை முன்னிறுத்திய போராட்டங்கள் இந்தக் காலகட்டத்தில் நடந்தன. ஒருவகையில் இந்நாவல் அதன் நேரடிச் சாட்சி. மதுரையில் தான் கண்ட ஒரு நெசவுத் தொழிலாளர் போராட்டமே இந்த நாவலுக்கான உந்துதல் என தொ.மு.சி. எழுதியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT