Published : 16 Feb 2023 06:33 AM
Last Updated : 16 Feb 2023 06:33 AM

ப்ரீமியம்
இணையக் களம் | வள்ளலார் இல்லம்: தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள்!

கண.குறிஞ்சி

சென்னை ஏழு கிணறு பகுதியில் உள்ள வள்ளலார் வாழ்ந்த இல்லத்துக்குச் சென்றிருந்தேன். ஏன் சென்றோம் என மனம் கசந்துவிட்டது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ உச்சகட்ட மனிதநேயர். ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ எனப் பறைசாற்றிய நன்னெறியாளர். ‘கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக!’ எனக் கொதித்தெழுந்த புரட்சித் துறவி.

அவர் வாழ்ந்த இல்லம் இப்போது குண்டும் குழியான தெருவில், நெருக்கமான வீடுகளுக்கு இடையில், பரிதாபமாகத் தோற்றமளித்தது. அதிர்ச்சியும் வேதனையும் மனதைக் கவ்வின. உலகச் சிந்தனையாளர்கள் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க ஓர் அரிய ஆளுமைக்கு நாம் செலுத்தும் மரியாதை இவ்வளவுதானா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x