Published : 19 Dec 2022 06:49 AM
Last Updated : 19 Dec 2022 06:49 AM

ப்ரீமியம்
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 7: கிராமம்தோறும் சுயராஜ்ஜியம்!

ஆ.சிவசுப்பிரமணியன்

இந்திய நாட்டின் அடிப்படை அலகுகள், இந்தியக் கிராமங்களே என காந்தியடிகள் கருதினார். அதன் அடிப்படையில், அதிகாரங்கள் கிராமங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டிவந்தார். அவரது ராமராஜ்ஜியக் கனவு, கிராமங்களையே மையமாகக் கொண்டிருந்தது. அவரது கனவான கிராம சுயராஜ்ஜியமும் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்கிற அவரது முழக்கமும் இன்று எவ்வாறு நடைமுறையில் உள்ளன? இதற்கு விடை காண, இந்த ஆண்டில் வெளியான மூன்று செய்திகள் துணைபுரிகின்றன.

முதல் செய்தி: தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினப் பிரிவுச் சிறார்கள் சிலர் மிட்டாய் வாங்கச் சென்றார்கள். “ஊர்க் கட்டுப்பாடு, உங்களுக்கு விற்க மாட்டோம்” எனக் கடைக்காரர் மறுக்கிறார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் காணொளியாகப் பரவியது. இது உண்மைதான் என அரசு அதிகாரிகளாலும் ஊடகங்களாலும் உறுதிசெய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x