Published : 11 Dec 2022 07:31 AM
Last Updated : 11 Dec 2022 07:31 AM

ப்ரீமியம்
டிசம்பர் 11: பாரதி 140ஆவது பிறந்த நாள் | வ.ரா. கண்ட மகாகவி

மகாகவி பாரதியார் | ஓவியம்: ஆதிமூலம்

அம்ஷன் குமார்

தமிழ்ப் புலமனைத்திலும் தன்னெழுச்சியுடன் ஒருவரின் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒவ்வோர் ஆண்டும் நினைவுகொள்ளப்பட்டுக் கொண்டாடப்படுகிறதென்றால் அது மகாகவி பாரதிக்கு மட்டும்தான். ஒரு சிற்றுரையைத் தயாரிப்பவர்கூடத் தமிழ்மொழிச் சிறப்பினைக் கூறுவதாகவோ, பெண்ணுரிமை பற்றியதாகவோ, பக்தியுணர்வினை ஊட்டுவதாகவோ, தேசியம் பற்றியதாகவோ, சமத்துவம் பற்றியதாகவோ எதுவாக இருப்பினும் பாரதியின் மேற்கோள்களைத் தவிர்ப்பதில்லை. தமிழ் நெடுங்கணக்கில் வேறு எவருக்கும் இல்லாத தனிச் சிறப்புகள் பாரதிக்கு உண்டு.

பாரதி மகாகவியா?: இன்று பாரதியை வானளாவப் புகழ்வது நமது பாரம்பரியத்தின்பாற்பட்ட எளிய செயலாகிவிட்டது. ஆனால், பாரதியைப் பரவலாக அறியத் தொடங்கியிருந்த காலத்தில் அவரை ‘மகாகவி’ என்று கூறியபோது எதிர்ப்பும் சர்ச்சைகளும் எழுந்தன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். வ.ரா. என்றழைக்கப்படும் வ.ராமஸ்வாமிதான் முதன்முதலாக பாரதியை மகாகவி என்றழைத்தார். ஜனரஞ்சகமான எழுத்தின் முன்னோடியாகக் கருதப்படும் கல்கி, வ.ரா.வின் கூற்றினை எதிர்த்தார். வேறு பலரும் அவர் அணியில் கூடினர். பாரதி நல்ல கவிஞர்தானேயொழிய மகாகவி அல்ல என்பதைத் தங்களுக்கே உரிய புரிதல்களுடன் வ.ரா.வுடன் சமர் புரிந்தனர். மரக்காலால் மகாநதியை அளந்துவிட முடியாதல்லவா? வ.ரா. தனது புலமைமிக்க வாதங்களுடன் அவர்களை எதிர்கொண்டார். கம்பனைப் போல் இளங்கோவைப் போல் பாரதியும் ஒரு மகாகவி என்பது இறுதியில் முடிவானது. பாரதி மணிமண்டபத்தை எட்டயபுரத்தில் கட்டுவதற்கு கல்கி உறுதுணையாக விளங்கினார் என்பதும் இதனையொட்டிய ஒரு சிறப்புச் செய்தியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x