Published : 16 Nov 2022 06:47 AM
Last Updated : 16 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு: தண்டனைக் குறைப்பு

தொகுப்பு: கோபால்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேரை உச்ச நீதிமன்றம் நவம்பர் 11 அன்று விடுவித்தது. இதே குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தின் 142ஆம் கூறு அளித்திருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடந்த மே 18 அன்று விடுவித்தது. பேரறிவாளனை விடுவித்த உத்தரவின் அடிப்படையிலேயே மற்ற ஆறு பேரையும் இப்போது உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதையடுத்து, சிறைத் தண்டனைக் கைதிகளைத் தண்டனைக் காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே விடுவிப்பதற்கான தண்டனைக் குறைப்பு அதிகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x