Published : 06 Nov 2022 07:26 AM
Last Updated : 06 Nov 2022 07:26 AM

ப்ரீமியம்
திராவிடமா, சம்ஸ்கிருதமா?

வ.ஞானசுந்தரம்

இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சம்ஸ்கிருதத்திலிருந்து தோன்றிய மொழிகள் என்ற தவறான கருத்து ஒரு காலத்தில் நிலவியிருந்தபோது, 1816ஆம் ஆண்டு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ் போன்றோர் தென்னிந்திய மொழிகள், சம்ஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை அல்ல என்ற கருத்தை நிறுவினர். இதன் தொடர்ச்சியாக திராவிட மொழிகளின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் (1814-1894), தனது ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலில் திராவிட மொழிகள், சம்ஸ்கிருத மொழியிலிருந்து தனித்து நிற்கும் ஒரு மொழிக்குடும்பம் என்பதை நிறுவினார். மேலும், திராவிடம் என்னும் சொல்லை ஒரு மொழிக்குடும்பத்தின் பெயராக நிலைநிறுத்தியதும் கால்டுவெல்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x