Published : 01 Nov 2022 06:47 AM
Last Updated : 01 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
மொழித் திணிப்பு: எந்த வகையிலும் நல்லதல்ல!

நா.முத்துநிலவன்

இந்தியா விடுதலை பெற்றவுடன் மொழிவழி மாநிலக் கோரிக்கைகள் எழுந்தன. இந்தி ஆதரவாளர்களால் நிரம்பியிருந்த ஆளும் காங்கிரஸ் கட்சி இதை ஏற்கவில்லை. ஆங்கிலேயர் காலத்திய மதராஸ், பம்பாய், டெல்லி, வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களை நிர்வாக எளிமைக்காக மட்டுமின்றி, மாநிலம் கடந்தும் இந்தியைத் திணிக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டனர். ஆங்கிலேயர் காலத்திலேயே மொழிவழி ‘பிரதேசக் காங்கிரஸ் கமிட்டி’ வைத்து மக்களைத் திரட்டிய கட்சி, ஆட்சிக்கு வந்ததும் இதை ஏற்காமல் இந்தித் திணிப்பில் இறங்கியது. ஒடிய மொழி பேசும் மக்கள் தனி மாநிலக் கோரிக்கையை ஆங்கிலேயரிடம் எழுப்ப, முதல் மொழிவழி மாநிலமாக 1935இல் ஒடிசா பிறந்துவிட்டது. ஆங்கிலேயர் புரிந்துகொண்டதை இந்தியத் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x