Published : 26 Oct 2022 06:49 AM
Last Updated : 26 Oct 2022 06:49 AM

ப்ரீமியம்
நம்பிக்கையூட்டுகிறதா நாளைய தலைமுறை?

 அ.இருதயராஜ்

“எனக்குக் கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்கிற ஆத்திரத்தில்தான் சத்யாவைத் தண்டவாளத்தில் பிடித்துத் தள்ளினேன்” - தமிழகத்தை உலுக்கிய சென்னை பரங்கிமலை ரயில்நிலையக் கொலையில், கல்லூரி மாணவர் சதீஷின் வாக்குமூலம் இது. தந்தை, மகள் என இரண்டு உயிர்களை ஒரே நேரத்தில் இழந்த சத்யாவின் குடும்பம் மீளாத் துயரில் மூழ்கியுள்ளது. தனிப்பட்ட காதல் பிரச்சினையாக இதைச் சுருக்கிவிட முடியாது. ஒட்டுமொத்த சமூக, பண்பாடு, அரசியல், உளவியல், ஊடகப் பயன்பாட்டுப் பின்னணியில் ஆழமான ஆய்வைக் கோரும் சிக்கல் இது.

தான் விரும்பிய பெண் தனக்குக் கிடைக்கவில்லை என்பதால், அவள் கொல்லப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஒருவருக்கு ஏன் தோன்றுகிறது? காதல் எப்போதும் வெற்றியில்தான் முடிய வேண்டும் என்கிற சிந்தனை எப்படி உருவாக்கப்பட்டது? பெண்ணின் நிராகரிப்பை ஆண் ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? தன்னுடைய உயிர்போல அவளது உயிரும் விலைமதிப்பில்லாதது என்னும் சிந்தனை இல்லாமல் போனது ஏன்? என்பன போன்ற கேள்விகளின் பின்னணியில் நம்மைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x