Published : 09 Oct 2022 09:00 AM
Last Updated : 09 Oct 2022 09:00 AM

ப்ரீமியம்
ஓவியம் உணர்த்தும் வரலாறு

க.த.காந்திராஜன்

ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி வம்சம் தன்னாட்சி மன்னர்களாகக் கருதப்படுகின்றனர். இப்பகுதியை ஆண்ட ரகுநாத சேதுபதி என்கிற கிழவன் சேதுபதியால் 1674–1710 ஆண்டுகளுக்கு இடையில் ராமலிங்க விலாசம் என்கிற அரண்மனை ராமநாதபுரத்தில் கட்டப்பட்டது. தென்னிந்தியாவின் கலை நுணுக்கமான அரண்மனைகளில் இதுவும் ஒன்று. நூறு ஏக்கரில் கட்டப்பட்ட இந்த அரண்மனை வளாகத்தில் தற்போது தர்பார் அரங்கு மட்டுமே எஞ்சியுள்ளது.
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ஜாக்ஸனுக்கும் கட்டபொம்மனுக்கும் இடையிலான சந்திப்பு இங்குதான் நடைபெற்றது. இந்த மண்டபத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் சேதுபதி மன்னர்களுக்குத் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களுடன் இருந்த அரசியல் உறவு, ஐரோப்பியத் தொடர்புகள், ராமாயண, பாகவதக் கதைகள், மன்னரது பொழுதுபோக்கு போன்ற நிகழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. கிழவன் சேதுபதி ஆட்சிக் காலத்தில் (8.5.1694), இலங்கையிலிருந்து இங்கு வந்த டச்சுக்காரர்கள் சேதுபதியிடம் முறையிட்டு, சேது நாட்டுக் கடலில் உள்ள முத்துச் சலாபங்களில் முத்துக்குளிக்கும் உரிமையைப் பெற்றனர். இந்நிகழ்வு ஓவியங்களாக இந்த அரண்மனையில் வரையப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x