Last Updated : 09 Oct, 2022 08:45 AM

 

Published : 09 Oct 2022 08:45 AM
Last Updated : 09 Oct 2022 08:45 AM

ப்ரீமியம்
தொ.மு.சிதம்பர ரகுநாதன் நூற்றாண்டு: நவீனத்துவம் வாய்ந்த எழுத்து!

செ.இளவேனில்

தமிழில் அதிகம் வாசிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு நாவல்களில் மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலே முதலிடத்தில் இருக்கக்கூடும். பொதுவுடைமை இயக்கம் வீடுதோறும் அந்நாவலைக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது. திராவிட இயக்கத் தலைவர் மு.கருணாநிதியும் தனக்குப் பிடித்த நாவல் என்று ‘தாய்’ நாவலைக் குறிப்பிட்டதோடு, அதைக் கவிதை நடையிலும் எழுதினார், அக்கதையைத் தழுவித் திரைப்பட ஆக்கமும் செய்தார். இன்றும், ‘உணர்ச்சிமிகு தருணங்க’ளில் இந்நூல் பரிசளிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

கார்க்கியின் தமிழ்க் குரல்: காந்தியரும் தமிழில் பௌத்தம் குறித்த சிறந்த அறிமுக நூல்களை எழுதியவருமான ப.ராமஸ்வாமியும் கார்க்கியின் அந்நாவலை, ‘அன்னை’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். என்றாலும், தொ.மு.சிதம்பர ரகுநாதனின் தமிழ் மொழியாக்கமே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கார்க்கியின் ‘மூன்று தலைமுறைகள்’, ‘தந்தையின் காதலி’ உள்ளிட்ட படைப்புகளையும் தொ.மு.சி. தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கார்க்கியின் சில சிறுகதைகள் ‘சந்திப்பு’ என்ற தலைப்பில் அவரது மொழியாக்கத்தில் தொகுப்பாக வெளியாகியுள்ளது. தமிழில், லியோ டால்ஸ்டாய், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி ஆகியோருக்கு இணையாக கார்க்கியும் அறிமுகமானதில், தொ.மு.சி.க்குப் பெரும் பங்குண்டு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x