Published : 07 Aug 2022 09:00 AM
Last Updated : 07 Aug 2022 09:00 AM
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓஷின் சிவா, தன் ஓவியத் திறத்தால் சர்வதேச அங்கீகாரம் பெற்றவர். நியூயார்க், லண்டன், பாரிஸ் உள்ளிட்ட பல சர்வதேசக் காட்சிகளில் தன் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளார். அரூப வகை ஓவியங்கள் வரைவதில் ஈடுபாடு காண்பிக்கும் ஓஷினின் ஓவியங்களில் தமிழும் அரசியலும் திடமாக வெளிப்படுகின்றன.
தலித், தமிழ், பெண் இந்த மூன்று அம்சங்களே ஓஷினுடைய ஓவியங்களின் மையமாக இருக்கின்றன. 21ஆம் நூற்றாண்டில் இந்த மூன்று வாழ்க்கை முறை அடைந்த மாற்றங்களை, நெருக்கடிகளை ஓஷின் தனது ஓவியங்கள் வழியாகப் பதிவுசெய்துள்ளார். கரோனா காலத்தில் பெண்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் இவர் தன் படைப்பு ஒன்றில் கவனத்துடன் பதிவுசெய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT