Last Updated : 14 Nov, 2025 06:48 AM

1  

Published : 14 Nov 2025 06:48 AM
Last Updated : 14 Nov 2025 06:48 AM

ப்ரீமியம்
நேருவும் ஊடகங்களும்

நாடு விடுதலை அடைவதற்கு முன் ‘பத்திரிகைச் சுதந்திரம்’ என்பது ஒருவித ஊசலாட்டத்தில் இருந்தது. விடுதலைக்குப் பிறகு, பத்திரிகைகள் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்தன. பிரதமர் நேரு அதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். பிரிட்டனில் உள்ள ஹாரோ பொதுப் பள்ளி​யிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்​கழகத்​திலும் கல்வி பயின்ற நேருவுக்கு ஜனநாயகம் குறித்து நன்றாகத் தெரிந்​திருந்தது.

ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்லச் சரியான கொள்கை தேவை என்பதை உணர்ந்​திருந்​தார்; ஜனநாயகரீ​தியிலான விமர்​சனங்களை வரவேற்​றார்; அத்தகைய விமர்​சனம், அரசியல் கட்சிகள் மூலமாகவோ, பத்திரி​கைகள் மூலமாகவோ வெளிப்​படலாம் என்றே கருதி​னார்; சுதந்​திரப் போராட்​டத்தில் மக்களை ஒன்றிணைக்கப் பத்திரி​கைகள் ஆற்றிய சக்தி​மிக்க பங்களிப்​பை​யும், சுதந்​திரத்​துக்குப் பிறகு நாட்டைக் கட்டமைக்கப் பத்திரி​கைகள் ஆற்றிவரும் பங்கையும் அவர் நன்கு அறிந்​திருந்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x