Published : 14 Nov 2025 08:00 AM
Last Updated : 14 Nov 2025 08:00 AM

‘மை லார்ட்’களுக்குள் ஒரு மைக்கேல் ஜாக்சன் - அர்ப்பணிப்பின் சாட்சியாகும் நீதிபதியின் நாற்காலி | ஓர் உளவியல் பார்வை

அந்த ‘இருக்​கை​யில்’ அமர்ந்​திருப்​ப​தன் அர்த்​தம் என்ன என்ற வினாவை, ஒரு நீதிபதி என்​றாவது எதிர்​கொள்ள வேண்​டிவரும். அது வெறும் நாற்​காலி அல்ல, நீதி​மன்​றத்​தில் நுழை​யும் ஒரு​வரின் பரி​மாணங்​களை அது மாற்​றியமைக்​கும்.

நீதிப​தி​களுக்​கும் பலவீனங்​கள், தன்​னம்​பிக்கை வறட்​சி, தடு​மாற்​றங்​கள், தயக்​கங்​கள் வரும். ஆனால், நீதி பரி​பாலனத்​துக்​காக அந்த நாற்​காலி​யில் ஏறும்​போது சிந்​தனை​கள் தீட்​டப்​படும், வார்த்​தைகள் வலுப்​பெறும், மிகுந்த வீரி​யத்​துட​னும், தைரி​யத்​துட​னும் முடிவு​கள் வெளிப்​படும். இது​வே, ஒரு​முறை ஒரு முன்​னாள் தலைமை நீதிப​தி​யின் துணை​வி​யாருடன் பேசிக் கொண்​டிருக்​கும்​போது, ‘ஒரு நீதிப​தி​யின் கடமை​யைச் செய்​வது கிட்​டத்​தட்ட தெய்​வீக அனுபவம்​போல உணர்​கிறேன்’ என்று உரைக்​கச் செய்​தது. ‘ஆனந்த் வெங்​கடேஷ் என்ற தனிமனித​னால் நினைத்​துக்​கூடப் பார்க்க முடி​யாத எண்​ணங்​கள் மற்​றும் செயல்​களை, நீதிப​தி​யான ஆனந்த் வெங்​கடேஷ் செய்ய முடிகிறது’ என்​றேன்.

என்​னை​விடப் பெரிய சக்தி ஒன்று இயங்​கு​கிறது என்ற உணர்​வு, இது இறைவனின் கைதானோ? என்ற வினாவை எழுப்​பியது. ஆனால், அந்த அம்​மை​யார் தந்த பதிலின் எளிமை, ஞானத்​தின் முத்​தாய் என்​னில் விழுந்​தது. ‘அந்த மாற்​றம் தெய்​வீக வரமல்ல, அது ஒரு மனித அனுபவம்’ என்​றார் அவர். மேலும், ‘ஆவலும், கடமை​யும் ஒன்​றிணை​யும்​போது எழும் விந்தை அது! தனிமனிதன் தன்​முனைப்பு துறந்​து, தான் ஏற்ற பாத்​திரத்தை நிறைவேற்​று​வ​தில் கரைந்​து​போகும் அரிய அனுபவக் கலை அது’ என்​றார்.

ஒழுக்கமும், ஒருமுகப்படுத்தலும்... இதை வியத்​தகு உதா​ரணங்​களால் விளக்​கி​னார். ‘மைக்​கேல் ஜாக்​சன் மேடைக்கு வெளியே கூச்ச சுபாவம் கொண்​ட​வர். ஆனால், அரங்​கில் கால் வைத்​தவுடன், ஆற்​றலும், வசீகர​மும் நிறைந்த ஆடும் அக்​னி​யாய் பொங்கி எழு​வார். அவரது ஆளுமை எங்​கும் கண்​டி​ராத வித்​தை​யாய் மிளிரும்.

அது தனிப்​பட்ட வாழ்க்​கை​யில் காணப்​பட்ட ஆளு​மைக்கு முற்​றி​லும் அப்​பாற்​பட்​ட​தாகத் தோன்​றும். சாதாரண மருத்​துவ நிபுணர் அறு​வை சிகிச்சை அரங்​கில் நுழைந்​தவுடன், 10 மணி நேரம் தொடர்ந்து சிக்​கலான அறு​வை சிகிச்சை செய்​யத் தேவை​யான கவனத்​தை​யும், திறனை​யும், மன ஒரு​மைப்​பாட்​டை​யும் பெறு​வர். ஒழுக்​க​மும், ஒரு​முகப்​படுத்​துதலும் மட்​டுமே அவர்​களை மாற்​றியமைத்​தது போலத் தோன்​றும்’ என்​றார்.

உளவிய​லா​ளர்​கள் ‘ஃப்​ளோ’ (Flow - செயல் லயிப்​பு/ ஒன்​றிப்​போதல்) என்று அழைக்​கும் நிகழ்​வு​தான் அது. அதாவது, நேரம் மறைந்​து, தன்​முனைப்பு கரைந்​து, பணியே நம்மை ஆட்​கொள்​ளும் ஓர் அரிய நிலை அது. இது தெய்​வீகம் அல்ல; தனி​நபர்​கள் தங்​களுக்​குள் மறைந்​திருக்​கும் உச்​சத்​தைத் தொட உதவும் சரணாகதி சார்ந்த நிலை!

நீதிப​தி​யின் இருக்கை மந்​திர இருக்கை அல்ல. எல்​லோரும் அதன் ஆற்​றலை உணர்​வ​தில்​லை. மேற்​சொன்ன தெய்​வீகத்​தன்மை விலைக்கு கிடைப்​ப​தில்​லை; அது ஓர் ஆன்ம அழைப்​பு. உறு​திப்​பாடும், தொடர் பயிற்​சி​யும், உண்​மைத் தன்​மை​யுமே ஒரு​வரை உயர்த்​துகிறது. இவற்றை உணராதவருக்கு நீதிப​தி​யின் இருக்கை என்​பது பதவி​யின் குறி​யீடு மட்​டுமே.

அந்​தப் பெண்​மணி​யின் வார்த்​தைகள் என்னை வளப்​படுத்​தின. வலிமை​யும், தெளி​வும் தெய்​வீகத் தன்​மை​யின் அடை​யாளங்​கள் அல்ல. மாறாக, கடமை​யும், தொழில் பற்​றும், நேர்​மை​யும் மட்​டுமே மாற்​றத்தை உரு​வாக்​கும். கடமை​யின் புனிதப் பொறுப்பை உணர்ந்​து, அதற்​கான பணிவை​யும், உழைப்​பை​யும் செலுத்த வேண்​டும். இது நீதித்​துறைக்கு மட்​டுமல்ல; எல்​லாத்தொழிலுக்​கும் பொருந்​தும்.

இந்​தப் புரிதல் நீதிப​தி​களுக்கு முக்​கிய​மானது. அவர்​களின் இருக்​கையை அதி​காரத்​தின் சிம்​மாசன​மாகக் காணும் சோதனை அவ்​வப்​போது நேரும். ஆனால், நீதிபதி பதவி​யின் மெய்​யான கண்​ணி​யம் அதி​காரத்​திலோ அல்​லது அவர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள சிறப்​புரிமை​யிலோ இல்​லை. பிழை செய்​யக்​கூடிய மனித​ராய், அதி​காரத்தை தொலைத்​து, பணிவைக் கைக்​கொண்டு சேவை செய்​யும்​போது​தான் ஒரு நீதிப​தி​யின் பணி செம்​மார்ந்து உயர்​கிறது.அந்த இருக்​கை​யின் தெய்​வீகத் தன்​மை, அது செய்​யப்​பட்ட மரத்​திலோ, செதுக்கி வைத்​துள்ள சின்​னத்​திலோ இல்​லை.

மாறாக, அந்த நீதிப​தி​யின் செயலில்​தான் உள்​ளது. சாதாரண மனிதருக்​கும், அசா​தா​ரணத் தருணத்​துக்​கும் இடையி​லான மெல்​லிய கோடு அது. அந்த இருக்கை நம்மை ஒரு​போதும் மாயை​யில் ஆழ்த்தி விடக்​கூ​டாது; மாறாக, அது நம்மை விழிப்புடன் வைத்​திருக்​கச் செய்ய வேண்​டும். நாம் கருப்பு அங்கி தரித்த கடவுளர்​கள் அல்ல; மக்​களின் நம்​பிக்​கையை காக்​கும் பணி​யாளர்​கள் என்​பதை உணர வேண்​டும். அந்​தப் பணிவை உயிர்ப்​புடன் வைத்​திருப்பது சட்​டத்​துக்கு மட்​டுமல்ல; நமக்​கும் நியாயம் செய்​வ​தாக அமையும்.

-ஆனந்த் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற நீதிபதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x