Published : 11 Nov 2025 06:24 AM
Last Updated : 11 Nov 2025 06:24 AM
மதுரை டிவிஎஸ் நகரில் வசித்துவந்த ஜெ.ஜெகதீஸ்குமார் (36), 14 ஆண்டுகளாகப் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் சாலைகள், கோயில்கள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவந்தார். தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த ஜெகதீஸ், தனது ஓய்வு நேரத்தில் இந்தப் பணிகளைச் செய்துவந்தார்.
மதுரை அழகப்பன் நகர் அருகே பாண்டியன் நகர் சாலையோரத்தில் அவர் நட்டுவைத்த நான்கு ஆண்டுகள் வளர்ந்த வேப்பமரம், புங்கமரம், சிங்கப்பூர் செர்ரிமரம் உள்ளிட்டவற்றை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் இடத்துக்கு எதிரே இருப்பதாகக் கூறி 24.09.2025 அன்று வெட்டிச் சாய்த்துவிட்டார். மரத்தை வெட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஆதங்கத்தில் காவல் துறையினர் முன்பாக ஜெகதீஸ் விஷத்தைக் குடித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெகதீஸ் 27.09.2025 அன்று உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT