Published : 09 Nov 2025 07:55 AM
Last Updated : 09 Nov 2025 07:55 AM

ப்ரீமியம்
வனப்பேச்சி: சமூகத்தின் மனசாட்சி

சென்​னைக் ​கலைக்​குழு​வின் தயாரிப்​பில், பிரளயன் நெறி​யாளுகை​யில், நவம்​பர் 2ஆம் நாள் சென்னை மியூசிக் அகாதெமி​யில் அரங்​கேற்​றம் செய்​யப்​பட்​டது ‘வனப்​பேச்​சி’ (பேரண்​டச்​சி) நாடகம். இங்கு பெரும்​பாலும் வென்​றவர்​களே கதை சொல்​லிகள்; வீழ்ந்​தவர் கதையைக்​கூட வென்​றவர்​கள்​தான் சொல்லி வரு​கிறார்​கள். இதற்கு மாற்​றாக, வீழ்ந்​தவர் கதையை வீழ்ந்​தவரே சொன்​னால் என்ன ஆகும் என்ற சிந்​தனை​யில், மகா​பாரத, ராமா​யாணக் கதைகளை ஏகலை​வனது பார்​வை​யில் மறு​வாசிப்பு செய்​து, ‘உபகதை’ என்​கிற நாடகத்தைத் தமிழுக்கு அளித்​தவர் பிரளயன். அவ்​வரிசை​யில் தற்​போது அளித்​துள்ள நாடகம்​தான் ‘வனப்​பேச்​சி’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x