Published : 09 Nov 2025 07:55 AM
Last Updated : 09 Nov 2025 07:55 AM
சென்னைக் கலைக்குழுவின் தயாரிப்பில், பிரளயன் நெறியாளுகையில், நவம்பர் 2ஆம் நாள் சென்னை மியூசிக் அகாதெமியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது ‘வனப்பேச்சி’ (பேரண்டச்சி) நாடகம். இங்கு பெரும்பாலும் வென்றவர்களே கதை சொல்லிகள்; வீழ்ந்தவர் கதையைக்கூட வென்றவர்கள்தான் சொல்லி வருகிறார்கள். இதற்கு மாற்றாக, வீழ்ந்தவர் கதையை வீழ்ந்தவரே சொன்னால் என்ன ஆகும் என்ற சிந்தனையில், மகாபாரத, ராமாயாணக் கதைகளை ஏகலைவனது பார்வையில் மறுவாசிப்பு செய்து, ‘உபகதை’ என்கிற நாடகத்தைத் தமிழுக்கு அளித்தவர் பிரளயன். அவ்வரிசையில் தற்போது அளித்துள்ள நாடகம்தான் ‘வனப்பேச்சி’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT