Published : 04 Nov 2025 07:21 AM 
 Last Updated : 04 Nov 2025 07:21 AM
கலைப் படங்கள் என்கிற வகைமையை நாட்டுக்கு முதலில் வழங்கியது வங்க மொழி சினிமா. ‘பதேர் பாஞ்சாலி’ (1955) என்கிற நியோ-ரியலிச பாணிப் படத்தின் வழியாக இந்தியக் கலைப் படங்களின் ‘பிதாமகர்’ என்கிற பெருமையைப் பெற்றவர் சத்யஜித் ராய்.
ஆனால், ‘பதேர் பாஞ்சாலி’ வெளியாவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 1952இல் ‘நாகரிக்’ (Nagorik) என்கிற கலைப் படத்தை எடுத்து முடித்தவர் ரித்விக் கட்டக் (1925 - 1976). அதற்குப் பிறகு கலைத்துவம் குன்றாத 8 படங்களைக் கொடுத்து, தன்னுடைய 51ஆவது வயதில் திடீரென மறைந்தார். அதன் பிறகு, அவரது கலையாளுமைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 25 ஆண்டுகள் கழித்தே (1977இல்) ‘நாகரிக்’ வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT