Published : 02 Nov 2025 07:42 AM 
 Last Updated : 02 Nov 2025 07:42 AM
எழுபதுகளில் வேலூரில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, அந்தப் பகுதியிலிருந்த மலைகளில் ஏறிச் சுற்றித் திரிவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. புதிதாக வாங்கியிருந்த பைக்கும் என் மனைவி எனக்கு பரிசாகக் கொடுத்த பெண்டாக்ஸ் காமிராவும் தூண்டு விசைகளாக அமைந்தன.
வேலூரில் வேலப்பாடி என்ற பகுதியில் உள்ள பகவதி மலை எனக்குப் பிடித்த ஓர் இடம். சுமார் முந்நூறு மீட்டர் உயரம்தான். படிகளும், ஒற்றையடிப்பாதையும் உண்டு. எளிதாக ஏறி விடலாம். உச்சியில் பல தொல்லியல் எச்சங்கள் உண்டு. அவைகளில் இரண்டை சிறப்பாக நான் குறிப்பிட விரும்புகின்றேன். ஒன்று, பாறையில் செதுக்கப்பட்ட சமணசின்னமான இரு பாதங்கள். இரண்டாவது, ஒருபாறையில் பொறிக்கப்பட்டுள்ள ராஷ்ட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் காலத்து கல்வெட்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT