Published : 28 Oct 2025 06:56 AM 
 Last Updated : 28 Oct 2025 06:56 AM
வடகிழக்குப் பருவமழையைத் தென்மேற்குப் பருவமழை அபூர்வமாக வரவேற்று அண்மையில் விடைபெற்றுள்ளது. இரண்டு பருவமழைகள் ஒரே தருணத்தில் சந்திக்கும்போது உழவர்கள் வாழ்க்கையில் விபரீதம் வராமல் தடுப்பது மிக அவசியம்.
ஆனால், என்ன நடக்கிறது? போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வயல்கள், களங்கள், தார்ச்சாலைகளில் ஏறக்குறைய 4 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன. அவை முளைத்தும் நிறம் மங்கியும் அழிகின்றன. இந்நிலையில் வடமேற்குப் பருவமழை காரணமாக சுமார் 1 லட்சம் ஏக்கரில் வயல்களில் தேங்கிய தண்ணீரால் பயிர்கள் அழுகுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT