Published : 22 Oct 2025 06:24 AM
Last Updated : 22 Oct 2025 06:24 AM
கடந்த அக்டோபர் 8ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் மின்தூக்கி கட்டுமானப் பணியின்போது நேர்ந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். செப்டம்பர் 30இல் சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 40 அடி உயரத்தில் கட்டுமானப் பணியின்போது திடீரென சாரம் சரிந்ததில், ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் ஜூலை 1இல் ஏற்பட்ட விபத்தில் எட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதற்கு ஒரு நாள் முன்னர் தெலங்கானாவில் உள்ள தனியார் வேதிப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 40 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT