Published : 20 Oct 2025 06:34 AM
Last Updated : 20 Oct 2025 06:34 AM

ப்ரீமியம்
என்போல் அவனும் நடுங்குக! - உயிருக்கு நேர் 2

நீட்சே என்றொரு ஜெர்மானிய மெய்யியலாளர். அவரது நூல்களில் ஒன்று ‘களிப்பின் அறிவியல்’ (The Gay Science). தன் நெஞ்சுக்கு நெருங்கிய நூல் என்று அவரே குறிப்பிடும் அந்நூலில், ‘மாறாத மீள்நிகழ்வு’ (eternal recurrence) என்று ஒரு வெடியைக் கொளுத்திப்போடுகிறார்.

அதென்ன? ஒரு நாள் உங்கள் கனவிலோ நனவிலோ ஒரு பூதம் வந்து, ‘இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இதே வாழ்வைத்தான் நீங்கள் திரும்பத்திரும்ப வாழ வேண்டியிருக்கும்; இந்த வாழ்வில் நீங்கள் பட்ட துன்பங்கள், பெற்ற இன்பங்கள், எண்ணிய எண்ணங்கள், அலுத்துச் சலித்த அற்ப நிகழ்வுகள் என்று அனைத்தையும், அச்சுப்பிசகாமல், அதே நிகழ்முறையில், திரும்பத்திரும்ப எண்ணற்ற முறை வாழ வேண்டியிருக்கும்’ என்று உங்கள் காதோரம் கிசுகிசுத்தால் என்ன சொல்வீர்கள்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x