Last Updated : 09 Oct, 2025 06:45 AM

 

Published : 09 Oct 2025 06:45 AM
Last Updated : 09 Oct 2025 06:45 AM

ப்ரீமியம்
நிலநடுக்க நிவாரணம்: விலகுமா தாலிபானின் தயக்கம்?

இந்தியக் கண்டத் தட்டும் (tectonic plate) யூரேசியக் கண்டத் தட்டும் சேரும் இடத்தில் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்களுக்குக் குறைவில்லை. குறிப்பாக, இந்து குஷ் மலைத்தொடர் பகுதிகளில் நிலநடுக்கங்கள் நிகழ்வது வழக்கம். 2025 ஆகஸ்ட் இறுதியில் நிகழ்ந்த 6 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம், கிழக்கு ஆப்கானிஸ்தானைப் பெரிதும் பாதித்தது. ஏறக்குறைய 2,200 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன.

நிலநடுக்​கங்கள் காரணமாக மண் சரிவுகள் ஏற்பட்டு, அது சாலைகளில் போக்கு​வரத்தை முடக்கி​ உள்ளது. மீட்புப் பணியும் தாமதமானது. ஹெலிகாப்​டர்​களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்​டுள்ளது. இப்போதைய தாலிபான் அரசுக்கு இந்த நிலநடுக்​கங்கள் ஒரு சவால்​தான். இயற்கைப் பேரிடர்களை தாலிபான் அரசு சமாளிக்க முடியாமல் திணறுவதாக விமர்​சனங்கள் எழுந்​திருக்​கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x