Published : 05 Oct 2025 10:39 AM
Last Updated : 05 Oct 2025 10:39 AM

ப்ரீமியம்
அவளும் அவர்களும் | நாவல் வாசிகள் 27

உலகப் புகழ்பெற்ற கவிஞர்களான கதே, ரில்கே, கோ யுன். சில்வியா பிளாத், தாகூர் போன்றவர்கள் நாவல் எழுதியிருக்கிறார்கள். கவிஞர்கள் எழுதிய நாவல்கள் அதன் கவித்துவ மொழிநடையால், புதுமையான கதையால் தனித்துவமாக விளங்குகின்றன. அந்த வரிசையில் வைத்துப் பேச வேண்டிய நாவல் மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் எழுதிய ‘சுமித்ரா’. 2012இல் வெளியான இதனைக் கே.வி. ஷைலஜா சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். முப்பத்தி எட்டு வயதான சுமித்ரா இறந்து கிடப்பதில் நாவல் தொடங்குகிறது. இது வயநாட்டில் வசித்த ஒரு பெண்ணின் கதை. சுமித்ரா இறந்துவிட்டாள் என்ற ஒற்றை வரிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது. முழு நாவலும் அவளைப் பற்றியது. நினைவோட்டங்களின் வழியே கதை விவரிக்கபடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x