Published : 30 Sep 2025 06:46 AM
Last Updated : 30 Sep 2025 06:46 AM
இன்றைய வாழ்க்கையில், கேளிக்கை ஒரு போதைபோல் நம்மைச் சூழ்ந்துள்ளது. நம்மிடையே சினிமா என்பது வெறுமனே ஒரு திரைக்கதை அல்ல; அது மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு மாயை. சினிமாவுக்கும் யதார்த்த அரசியலுக்கும் இடையிலான எல்லை மங்கிப்போனது ஏன் என்பது முக்கியமான கேள்வி.
திரைப்படம் சமூகச் சிந்தனைகளைத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், திரையில் நீதி பேசுபவர்களே நிஜத்திலும் தலைவர்கள் என்று நம்புவது, நமது அரசியல் புரிதலின் பலவீனத்தைக் காட்டுகிறது. முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் அரசியலின் திசையை சினிமா தீர்மானித்துவருவது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT