Published : 28 Sep 2025 07:07 AM
Last Updated : 28 Sep 2025 07:07 AM
தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் ‘ஆதான் பிரதான்’ என்னும் திட்டத்தின் கீழ் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில் தலைசிறந்ததாக விளங்கிய செவ்வியல் நாவல்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது. அவ்வகையில் பத்துக்கும் மேற்பட்ட பிறமொழி நாவல்கள் தமிழில் வெளிவந்தன. 1987இல் எச்.வி.சுப்பிரமணியன் என்பவரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ என்னும் நாவலும் அவற்றில் ஒன்று.அதன் மூல ஆசிரியர் கன்னட மொழியின் தலைசிறந்த எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பா. தமிழ்ச்சூழலில் அவருடைய அறிமுகம் அப்போதுதான் தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT