Last Updated : 08 Sep, 2025 07:37 AM

 

Published : 08 Sep 2025 07:37 AM
Last Updated : 08 Sep 2025 07:37 AM

இசைக் கலைஞர் பூபேன் அண்ணாவின் படைப்புகள் நவீனத்துவத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி!

இந்​திய கலாச்​சா​ரம் மற்​றும் இசை​யில் ஆர்​வ​முள்ள அனை​வருக்​கும் இன்று (செப்​டம்​பர் 8) மிக​வும் சிறப்பு வாய்ந்த நாள். நாட்டு மக்​கள் அனை​வரும் அறிந்த, அசா​தாரண திறன் வாய்ந்த இசைக்​கலைஞர்​களில் ஒரு​வ​ரான டாக்​டர் பூபேன் ஹசா​ரி​கா​வின் பிறந்த நாள் இன்​று. இந்த ஆண்டு அவர் பிறந்த நூற்​றாண்டு கொண்​டாட்​டங்​களின் தொடக்க ஆண்டு என்​பது நாம் அனை​வரும் அறிந்​ததே. இந்​திய இசைக்​கும் கலைக்​கும் அவர் அளித்த மகத்​தான பங்​களிப்​பு​களை மீண்​டும் நினை​வு​கூர இது ஒரு சிறந்த தருண​மாக அமைந்​துள்​ளது.

அசாமில் இருந்து காலத்​தால் அழி​யாத நதி போல ஒரு குரல் சீறிப் பாய்ந்து வெளிப்​பட்​டது. அந்​தக் குரல் எல்​லைகளை​யும் கலாச்​சா​ரங்​களை​யும் கடந்​து, மனிதகுலத்​தின் உணர்​வைச் சுமந்து சென்​றது. பூபேன் அண்ணா உலகம் முழு​வதும் பயணம் செய்​தார். சமூகத்​தின் அனைத்​துப் பிரி​வினருட​னும் தோளோடு தோளாக இணைந்​திருந்​தார். ஆனால் அவர் அசாமில் தமது வேர்​களு​டன் ஆழமாகப் பிணைந்​திருந்​தார். அசாமின் வளமான வாய்​மொழி மரபு​கள், நாட்​டுப்​புற மெல்​லிசைகள், சமூக ரீதி​யாகக் கதை சொல்​லும்நடை​முறை​கள் ஆகியவை அவரது ஆரம்​ப​கால குழந்​தைப் பரு​வத்தை நுட்​ப​மாக​வும் ஆழமாக​வும் வடிவ​மைத்​தன. இந்த அனுபவங்​களே அவரது கலைத் திறனின் அடித்​தள​மாக அமைந்தன.

அவர் பதின் பரு​வத்​தில் இருந்​த​போது, தமது முதல் பாடலைப் பதிவு செய்​தார். இசை என்​பது அவரது ஆளு​மை​யின் ஒரு பகுதி மட்​டுமே. தொடர்ந்து கற்​றுக்​கொள்ள வேண்​டும் என்ற ஆசை​தான் அவரை காட்​டன்கல்​லூரி, பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகம் ஆகிய​வற்​றில் சிறந்து விளங்​கச் செய்​தது. அத்​துடன் அவரை அமெரிக்​கா​விற்​கும் அழைத்​துச் சென்​றது. அங்கு அவர் அந்​தக் காலத்​தின் முன்​னணி கல்​வி​யாளர்​கள், சிந்​தனை​யாளர்​கள், இசைக்​கலைஞர்​கள் ஆகியோ​ருடன் தொடர்பு கொண்​டார்.

புகழ்​பெற்ற கலைஞரும், மக்​கள் உரிமை​கள் தொடர்​பான இயக்​கத்​தின் தலை​வரு​மான பால் ராப்​சனை​யும் அவர்சந்​தித்​தார். ராப்​சனின் ‘ஓல்ட் மேன் ரிவர்’ என்ற பாடல் பூபேன் அண்ணாவின் புகழ்​பெற்ற இசையமைப்​பான ‘பிஸ்​டிர்னோ பரோரே'-வுக்குஉத்​வேக​மாக அமைந்​தது. மிக​வும்போற்​றப்​பட்ட பெண்​மணி​யாகத்திகழ்ந்த அமெரிக்​கா​வின் அப்​போதையமுதல் பெண்​மணி எலினோர் ரூஸ்​வெல்ட், இந்​திய நாட்​டுப்​புற இசையைச் சிறப்​பாக நிகழ்த்​தி​யதற்​காக பூபேன் ஹசா​ரி​கா​வுக்​குத் தங்​கப் பதக்​கம் வழங்கி கௌர​வித்​தார்.

பூபேன் அண்ணா அமெரிக்​கா​விலேயே தங்​கு​வதற்​கான வாய்ப்​பைப்பெற்​றார். ஆனாலும் அவர் இந்​தி​யா​வுக்​குத் திரும்பி இசைத் துறை​யில் தன்னை ஈடு​படுத்​திக் கொண்​டார். வானொலி தொடங்கி நாடகம் வரை, திரைப்​படங்​கள் முதல் ஆவணப்​படங்​கள் வரை, ஒவ்​வொரு கலைப்​படைப்பு அம்​சங்​களி​லும் அவர் நன்கு தேர்ச்சி பெற்​றிருந்​தார். அவர் எங்கு சென்​றாலும், இளம் திறமை​யாளர்​களை ஆதரிப்​ப​தற்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்​தார். அவரது இசைப் படைப்​பு​கள் ஏழைகளுக்​கான நீதி, கிராமப்​புற மேம்​பாடு, மக்​களின் வலிமை போன்ற சமூகச் செய்​தி​களை வழங்​கின.

தமது இசை​யின் மூலம், படகு ஓட்​டு​பவர்​கள், தேயிலைத் தோட்​டத் தொழிலா​ளர்​கள், பெண்​கள், விவ​சா​யிகள் போன்​றவர்​களின் தேவை​களுக்​கும் எதிர்​பார்ப்​பு​களுக்​கும் பூபேன் ஹசா​ரிகா குரல் கொடுத்​தார். கலை உணர்​வுடன் கூடிய பூபேன் அண்​ணா​வின் படைப்​பு​கள், நவீனத்​து​வத்​தைப் பிர​திபலிக்​கும் ஒரு சக்​தி​வாய்ந்த கண்​ணாடி​யாக​வும் மாறின. குறிப்​பாக அவரைப் போன்ற சமூக ரீதி​யாக பின்​தங்​கிய வகுப்​பைச் சேர்ந்த பலர், அவரது இசையி​லிருந்து மன வலிமை​யை​யும் நம்​பிக்​கை​யை​யும் பெற்​றனர்.

‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வு பூபேன் ஹசா​ரி​கா​வின் வாழ்க்​கைப் பயணத்​தில் சிறப்​பான முறை​யில் வெளிப்​பட்​டது. நாடு முழு​வதும் உள்ள மக்​களை ஒன்​றிணைக்க அவரது படைப்​பு​கள் முயன்​றன. அவர் அஸ்​ஸாமி, வங்​காளம், இந்தி ஆகிய மொழிகளில் திரைப்​படங்​களுக்கு இசையமைத்​தார்.

பூபேன் அண்ணா, ஒரு தீவிர அரசி​யல்​வா​தி​யாக இல்​லா​விட்​டாலும், பொது சேவை​யில் தன்னை ஈடு​படுத்​திக் கொண்​டார். 1967-ம்
ஆண்​டில், அசாமில் உள்ள நௌபோ​யிச்சா தொகு​தியி​லிருந்து சுயேச்​சை​யாகப் போட்​டி​யிட்டு சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக அவர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். அவர் ஒரு​போதும் முழுநேர தீவிர அரசி​யல்​வா​தி​யாக மாற​வில்​லை. ஆனாலும், மக்​களுக்​குச் சேவை செய்​வ​தில் அவருக்கு இருந்த ஆர்​வம் அதீத​மானது.

பத்​ம, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதா​சாகேப் பால்கே விருது போன்ற பல விருதுகள் அவருக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. 2019-ம் ஆண்​டில், எங்​களது ஆட்​சிக் காலத்​தில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்​கப்​பட்​டது. இது எனக்​கும், தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசுக்​கும் கிடைத்த ஒரு பெரு​மை​யாகும். இசை, அனைத்​துத்தடைகளை​யும் தாண்​டிச் செல்​லக்​கூடிய தன்மை வாய்ந்​தது.

பூபேன் ஹசா​ரி​கா​வின் பாடல்​களை இளைஞர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை அனை​வரும் தொடர்ந்து பாடி வரு​கிறார்​கள். பூபேன் ஹசா​ரிகா நமக்​குக் கிடைத்​தது பாரதத்​தின் அதிர்​ஷ்டம். அவரது நூற்​றாண்டு விழா​வின் தொடக்​கத்​தைக் கொண்​டாடும் இந்த வேளை​யில், அவர் வழங்​கிய செய்​தியை தொலை​தூரங்​களுக்​குப் பரப்ப நாம் உறு​தி​யேற்​போம். இசை, கலை, கலாச்​சா​ரம் ஆகிய​வற்றை ஆதரிக்​க​வும், இளம் திறமை​யாளர்​களை ஊக்​குவிக்​க​வும், இந்​தி​யாவை படைப்​பாற்​றல் மற்​றும் கலைச் சிறப்​பிற்​கான களமாக மாற்​ற​வும்​ தொடர்ந்​து பணி​யாற்​ற, பூபேன்​ ஹசா​ரி​கா​வின்​ நூற்​றாண்​டு நம்​மை ஊக்​குவிக்​கட்​டும்​.

- நரேந்திர மோடி, பிரதமர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x