Published : 07 Sep 2025 07:57 AM
Last Updated : 07 Sep 2025 07:57 AM
மதுரையில் காமன் பண்டிகையின் போது நடக்கும் லாவணியைப் பார்த்திருக்கிறேன். எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரில் இரண்டு பிரிவாக கலைஞர்கள் அமர்ந்துகொண்டு இசையோடு பாடுவார்கள். தங்கள் தரப்பை நியாயப்படுத்த கதைகளும் இலக்கியச் சான்றுகளும் கொடுப்பார்கள்.
அதுபோன்று வங்காள கிராமங்களில் ‘மேளா’ என்ற போட்டிப்பாடல் நிகழ்ச்சி நடப்பதுண்டு. இரண்டுக் குழுக்கள் எதிரெதிராகப் பாடுவார்கள். அப்படி சுயமாகப் பாட்டுக்கட்டிப் பாடும் ஒருவனின் கதையை தாராசங்கர் பந்தோபாத்யாயா, ‘கவி’ என்ற நாவலாக எழுதியிருக்கிறார். இதனை த.நா.குமாரசாமி தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT